/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார் டிரைவரை கொலை செய்து உடல் எரிப்பு: தி.மு.க., கவுன்சிலர், இரு மகன்கள் சிக்கினர்
/
கார் டிரைவரை கொலை செய்து உடல் எரிப்பு: தி.மு.க., கவுன்சிலர், இரு மகன்கள் சிக்கினர்
கார் டிரைவரை கொலை செய்து உடல் எரிப்பு: தி.மு.க., கவுன்சிலர், இரு மகன்கள் சிக்கினர்
கார் டிரைவரை கொலை செய்து உடல் எரிப்பு: தி.மு.க., கவுன்சிலர், இரு மகன்கள் சிக்கினர்
ADDED : நவ 03, 2025 12:06 AM

மேட்டுப்பாளையம்:  ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கார் டிரைவரை கொலை செய்த வழக்கில், காரமடை நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் ரவிகுமார், அவரது இரு மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், மகாதேவபுரத்தைச் சேர்ந்தவர் அலாவுதீன், 36; கார் டிரைவர். இவர் காணாமல் போனதாக, 2024 ஏப்ரலில் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அவரது மனைவி சுமையா புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடினர்.
பழக்கம் இதற்கிடையே, சுமையாவிற்கும், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், 39, என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது.
தொடர்ந்து, அலாவுதீனின் சகோதரர் ஆரிஸ், 32, அவரது நண்பர் கவுதம், 38, ஆகியோர் அப்துல் ஹக்கீம் இருப்பிடத்திற்கு சென்றனர்.
அவரிடம், 'உனக்கும், என் அண்ணிக்கும் பழக்கம் ஏற்பட்டதால் தான் என் அண்ணன் அலாவுதீன் காணாமல் போய்விட்டார் ' என, ஆரிஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, கத்தியால் அப்துல் ஹக்கீமின் கையில் குத்தினார். வழக்கு பதிந்த போலீசார், ஆரிஸ், கவுதமை அக்., 27ல் கைது செய்தனர்.
அப்போது, ஆரிசிடம் நடத்திய விசாரணையில், அலாவுதீனுக்கும், காரமடை நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் ரவிகுமாரின் இரண்டாவது மகன் சரண்குமாரின் மனைவி பூஜாவிற்கும் பழக்கம் இருந்ததாக தெரிவித்தார்.
மாயமானார் கடைசியாக, 2024 ஏப்., 14ம் தேதி அலாவுதீன், ரவிகுமார் வீட்டிற்கு சென்றதாகவும், அதன் பின் மாயமானதாகவும் ஆரிஸ் போலீசாரிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, ரவிகுமார் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்த போது, திடுக்கிடும் தகவல் வெளியானது.
பூஜாவுடன் தொடர்பில் இருந்த அலாவுதீனை வீட்டிற்கு வரவழைத்த ரவிகுமார், அவரது மூத்த மகன் மணிகண்டன், இரண்டாவது மகன் சரண்குமார் ஆகியோர் சேர்ந்து, அலாவுதீனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
அலாவுதீன் உடலை காரமடை அருகே மாதேஸ்வரன் மலைப்பகுதிகாட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்து, தடயத்தையும் அழித்துள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று எலும்புத் துண்டுகளை மீட்டு, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பினர். ரவிகுமார், அவரது இரு மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை, உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

