/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., நிர்வாகி திறந்த கடை கூட்டுறவு செயலாளர் பணி நீக்கம்
/
தி.மு.க., நிர்வாகி திறந்த கடை கூட்டுறவு செயலாளர் பணி நீக்கம்
தி.மு.க., நிர்வாகி திறந்த கடை கூட்டுறவு செயலாளர் பணி நீக்கம்
தி.மு.க., நிர்வாகி திறந்த கடை கூட்டுறவு செயலாளர் பணி நீக்கம்
ADDED : ஜூலை 18, 2025 12:22 AM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே தி.மு.க., ஒன்றிய செயலாளரை வைத்து பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்த சம்பவம் தொடர்பாக, ஜடையம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜடையம்பாளையம் புதூரில், புதிய பகுதி நேர ரேஷன் கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த ரேஷன் கடை ஜடையம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்டது. இந்த கடை திறப்பின் போது மேட்டுப்பாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வராஜ் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லை. அதே சமயம் விதிகளை மீறி தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி., கல்யாணசுந்தரம் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டு, அவர் ரிப்பன் கட் செய்து கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
'ரேஷன் கடை வருவதற்கு நான் தான் காரணம். இந்த செயல் ஒருதலை பச்சமானது, அரசியல் சட்டத்திற்கு புறம்பானது', என மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாரிடம் போனில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, விதிகளை மீறி செயல்பட்ட ஜடையம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பட்டுலிங்கத்தை தற்காலிக பணி நீக்கம் செய்து, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி உத்தரவிட்டார்.