sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தி.மு.க., நிர்வாகி திறந்த கடை கூட்டுறவு செயலர் பணி நீக்கம்

/

தி.மு.க., நிர்வாகி திறந்த கடை கூட்டுறவு செயலர் பணி நீக்கம்

தி.மு.க., நிர்வாகி திறந்த கடை கூட்டுறவு செயலர் பணி நீக்கம்

தி.மு.க., நிர்வாகி திறந்த கடை கூட்டுறவு செயலர் பணி நீக்கம்


ADDED : ஜூலை 18, 2025 02:17 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே தி.மு.க., ஒன்றிய செயலரை வைத்து, பகுதி நேர ரேஷன் கடையை திறந்தது தொடர்பாக, ஜடையம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜடையம்பாளையம் புதுாரில், புதிய பகுதி நேர ரேஷன் கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த ரேஷன் கடை, ஜடையம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்டது.

கடை திறப்பின் போது மேட்டுப்பாளையம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ், திறப்பு விழாவுக்கு அழைக்கப்படவில்லை. அதே சமயம் விதிகளை மீறி தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலர் எஸ்.எம்.டி., கல்யாணசுந்தரம் அழைக்கப்பட்டு, அவர் ரிப்பன் கட் செய்து கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

'ரேஷன் கடை வருவதற்கு நான் தான் காரணம்' என, மேட்டுப்பாளையம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாரிடம் போனில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, விதிகளை மீறி செயல்பட்ட ஜடையம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர் பட்டுலிங்கத்தை தற்காலிக பணி நீக்கம் செய்து, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us