sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'வெளியூர் வியாபாரிகளை அனுமதிக்க வேண்டாம்!'

/

'வெளியூர் வியாபாரிகளை அனுமதிக்க வேண்டாம்!'

'வெளியூர் வியாபாரிகளை அனுமதிக்க வேண்டாம்!'

'வெளியூர் வியாபாரிகளை அனுமதிக்க வேண்டாம்!'


ADDED : அக் 18, 2024 10:25 PM

Google News

ADDED : அக் 18, 2024 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: 'தீபாவளி பண்டிகையின் போது, வெளியூர் வியாபாரிகள், தெருவோர கடைகள் அமைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் பகுதி கடை உரிமையாளர்கள் நல சங்கம், நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளது.

பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் பகுதி கடை உரிமையாளர்கள் நல சங்கத்தினர், நகராட்சி கமிஷனர் கணேசனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் பகுதி மிகவும் குறுகலானது. பண்டிகை காலங்களில் வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள், தெருவோர கடைகள் அமைப்பதால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தியும், உள்ளூர் வணிகர்களை துயரத்துக்கு உள்ளாக்கும் வகையில், வெளியூர் வியாபாரிகள் ரோட்டோர கடை அமைத்து பொருட்களை விற்கின்றனர். வெளியூர் வியாபாரிகளை அனுமதிக்க கூடாது. மேலும், நகராட்சி சார்பாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us