sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒரு புகார் குடுக்க இவ்ளோ துாரம் போகணுமா? பேரூர் கோட்டத்துக்குள் மாறுமா மகளிர் போலீஸ் ஸ்டேஷன்

/

ஒரு புகார் குடுக்க இவ்ளோ துாரம் போகணுமா? பேரூர் கோட்டத்துக்குள் மாறுமா மகளிர் போலீஸ் ஸ்டேஷன்

ஒரு புகார் குடுக்க இவ்ளோ துாரம் போகணுமா? பேரூர் கோட்டத்துக்குள் மாறுமா மகளிர் போலீஸ் ஸ்டேஷன்

ஒரு புகார் குடுக்க இவ்ளோ துாரம் போகணுமா? பேரூர் கோட்டத்துக்குள் மாறுமா மகளிர் போலீஸ் ஸ்டேஷன்

1


ADDED : ஏப் 23, 2025 11:26 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 11:26 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்துார், ; பேரூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போத்தனுாரில் செயல்படுகிறது. அதனால், வெகுதொலைவு சென்று புகார் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு, மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பேரூர் உட்கோட்டத்துக்கு உட்பட்டு தொண்டாமுத்துார், காருண்யா நகர், ஆலாந்துறை, பேரூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, கே.ஜி.சாவடி, பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஆகிய எட்டு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.

இதில், மாவட்ட போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ள கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இல்லாமல் இருந்ததால், அப்பகுதி மக்களும் புகார் அளிக்கும் வகையில், போத்தனுாரில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது.

கருமத்தம்பட்டி உட்கோட்டத்துக்காக, 2023ல், சூலுாரில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டது. ஆனால், பேரூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்காக செயல்படும் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் தற்போது வரை, மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட போத்தனுாரிலேயே செயல்படுகிறது. இதனால், சாடிவயல், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 35 கி.மீ., துாரத்தில் உள்ள போத்தனுாரில் உள்ள பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து செல்லும் நிலை உள்ளது.

வெகுதொலைவு செல்ல வேண்டும் என்பதால், ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிக்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

அதனால், பேரூர் உட்கோட்ட எல்லையை தாண்டி, மாநகர போலீஸ் எல்லையில் செயல்படும் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனை, உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிக்குள் கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us