sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மக்கள் வீதிக்கு வரும் நிலையை உருவாக்கிடாதீங்க! அதிகாரிகளுக்கு மத்திய மண்டல கூட்டத்தில் எச்சரிக்கை

/

மக்கள் வீதிக்கு வரும் நிலையை உருவாக்கிடாதீங்க! அதிகாரிகளுக்கு மத்திய மண்டல கூட்டத்தில் எச்சரிக்கை

மக்கள் வீதிக்கு வரும் நிலையை உருவாக்கிடாதீங்க! அதிகாரிகளுக்கு மத்திய மண்டல கூட்டத்தில் எச்சரிக்கை

மக்கள் வீதிக்கு வரும் நிலையை உருவாக்கிடாதீங்க! அதிகாரிகளுக்கு மத்திய மண்டல கூட்டத்தில் எச்சரிக்கை


ADDED : ஏப் 23, 2025 11:17 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; 'மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலையை உருவாக்கி விடாதீர்கள்' என, கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டத்தில், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டம், மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் மீனா தலைமை வகித்தார். உதவி கமிஷனர் செந்தில்குமரன், நிர்வாக பொறியாளர் கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, கவுன்சிலர்கள் பேசியதாவது:

வார்டுகளில் குப்பை அகற்றுவதில் துாய்மை பணியாளர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சாக்கு மூட்டைகளில் குப்பையை சேகரித்து, தள்ளுவண்டிகளில் எடுத்துச் செல்கின்றனர். சில பேட்டரி வாகனங்கள் பழுது காரணமாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

கெம்பட்டி காலனியில் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், சுகாதார பிரச்னைகளுக்கு தீர்வு காண புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

புலியகுளம் அருகே அம்மன் குளம் பகுதியில் சாலைகள் மோசமாக உள்ளன. அப்பகுதி மக்கள் எந்த நேரத்திலும் போராட்டத்தில் ஈடுபடலாம். அதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேர குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் பல்வேறு இடங்களில் சேதம் அடைந்துள்ளது; விரைந்து சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் பேசினர்.

மண்டல தலைவர் மீனா பேசுகையில்,''மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலையை அதிகாரிகள் உருவாக்கி விடக்கூடாது. அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு தர வேண்டியது அவர்களது கடமை,'' என்றார்.






      Dinamalar
      Follow us