/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பையை திறந்தவெளியில் கொட்டாதீங்க! நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
/
குப்பையை திறந்தவெளியில் கொட்டாதீங்க! நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
குப்பையை திறந்தவெளியில் கொட்டாதீங்க! நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
குப்பையை திறந்தவெளியில் கொட்டாதீங்க! நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
ADDED : அக் 30, 2025 10:58 PM

வால்பாறை:  வால்பாறையில், திறந்தவெளியில் குப்பை உள்ளிட்ட கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வால்பாறை நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. நகரை சுகாதாரமாக மாற்ற நகராட்சி சார்பில் நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படுகின்றன.
வால்பாறை படகு இல்லம் அருகே சாலையோரம் கொட்டுப்பட்டுள்ள குப்பை உள்ளிட்ட கழிவுகளால் சுகாதார சீர்கோடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. துாய்மை இந்தியா திட்டத்தில் பல முறை விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டும், பல்வேறு இடங்களில் திறந்தவெளியில் பொதுமக்கள் குப்பையை வீசுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது.
இது குறித்து, நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது:
வால்பாறையில் துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், திட்டம் குறித்து அனைத்து வார்டுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வால்பாறை நகரில் பொதுமக்கள் சிலர் குப்பையை மூட்டைகளாக கட்டி, திறந்த வெளியில் வீசி செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை திறந்தவெளியில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும்.
வால்பாறை நகரை துாய்மையாக பராமரிக்க, நாள் தோறும் துாய்மை பணியாளர்கள் வீடு மற்றும் கடைகளில் நேரடியாக வந்து குப்பையை தரம் பிரித்து பெற்று செல்லும் நிலையில், திறந்த வெளியில் குப்பை குவிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும். தடையை மீறினால், அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு, கூறினார்.

