/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கலை கனவு இல்ல பயனாளிகள் அதிருப்தி
/
கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கலை கனவு இல்ல பயனாளிகள் அதிருப்தி
கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கலை கனவு இல்ல பயனாளிகள் அதிருப்தி
கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கலை கனவு இல்ல பயனாளிகள் அதிருப்தி
ADDED : மார் 20, 2025 11:41 PM
அன்னுார்: கனவு இல்ல பயனாளிகள் பலருக்கு, கழிப்பறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் அதிருப்தியில் உள்ளனர்.
சொந்த வீடு இல்லாத, குடிசை வீடு மற்றும் தற்காலிக பொருட்களால் கட்டப்பட்ட வீடுகளில் வசிப்போருக்கு 360 சதுர அடியில், கான்கிரீட் வீடு கட்ட, தலா மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது. ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என அறிவித்தது.
இத்திட்டத்தில் வடக்கலுார் ஊராட்சியில் வடக்கலுார், கரியாக்கவுண்டனுார் உள்ளிட்ட பகுதிகளில் 21 பயனாளிகள் கான்கிரீட் வீடு கட்டி வருகின்றனர்.
இதில் பயனாளிகள் சிலர் கூறுகையில், ''கனவு இல்லம் திட்டத்தில் கழிப்பறை கட்டுவதற்கு 12 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால் வடக்கலுார் ஊராட்சியில் ஓன்பது பயனாளிகளுக்கு கழிப்பறை கட்டுவதற்கான பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை. இதனால் கழிப்பறை கட்ட முடியாத நிலை உள்ளது.
அரசு அறிவித்த 360 சதுர அடியில், மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் வீடு கட்ட முடியாது. ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. எனவே வெளியில் வட்டிக்கு கடன் வாங்கி வீடு கட்டி வருகிறோம். இந்நிலையில் கழிப்பறை கட்டுவதற்கு நிதி ஒதுக்காததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். கனவு இல்லம் திட்ட பயனாளிகள் அனைவருக்கும் கழிப்பறை கட்ட நிதி ஒதுக்க வேண்டும்,'' என்றனர்.