sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கலங்கலாக வந்தது குடிநீர்: குடித்து கவுன்சிலர் 'ஸ்டன்ட்'

/

கலங்கலாக வந்தது குடிநீர்: குடித்து கவுன்சிலர் 'ஸ்டன்ட்'

கலங்கலாக வந்தது குடிநீர்: குடித்து கவுன்சிலர் 'ஸ்டன்ட்'

கலங்கலாக வந்தது குடிநீர்: குடித்து கவுன்சிலர் 'ஸ்டன்ட்'


ADDED : பிப் 18, 2024 01:03 AM

Google News

ADDED : பிப் 18, 2024 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை மாநகராட்சி, 44வது வார்டுக்கு உட்பட்ட காளியம்மன் வீதியில் உள்ள வீடுகளுக்கு, 12 நாட்களுக்கு பின் நேற்று குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. தண்ணீர் கலங்கலாக இருந்ததால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் காயத்ரி, மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தார். அப்போது, சிறுவாணி குடிநீரையும், பில்லுார்-3 திட்டத்தில் பெறப்படும் தண்ணீரையும் கலந்து கொடுப்பது தெரியவந்தது.

பில்லுார்-3 திட்டத்தில் எடுக்கப்படும் தண்ணீர், புது குழாயில் மண் கலந்து வருவதால், கலங்கலாக இருக்கிறது. இருப்பினும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, தரத்தை பரிசோதனை செய்து, வழங்கப்படுவதாக அலுவலர்கள் கூறினர்.

சிறுவாணியில் இருந்து தரப்படும் குடிநீர் அளவு குறைவாக இருப்பதால், பில்லுார்-3ல் எடுக்கப்படும் தண்ணீர் வினியோகிப்பதாக, அப்பகுதி மக்களிடம், கவுன்சிலர் காயத்ரி விளக்கி, சமாதானம் செய்தார். குடிநீரின் தரத்தை உறுதி செய்து காட்டுவதற்காக, அவரே குடித்துக் காண்பித்தார்.






      Dinamalar
      Follow us