ADDED : ஜன 19, 2024 11:47 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சியில், இரண்டு நாட் களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது, என, நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.
நகராட்சி கமிஷனர் சுப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் ரோடு நீருந்து நிலையத்தில், அபிவிருத்தி பணிகள் நடக்கின்றன.
இதனால், வரும், 22ம் தேதி மற்றும், 23ம் தேதி ஆகிய இரு நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
