/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் பஸ்சை நிறுத்தி மோதல் டிரைவர், கண்டக்டர்கள் கைது
/
ரோட்டில் பஸ்சை நிறுத்தி மோதல் டிரைவர், கண்டக்டர்கள் கைது
ரோட்டில் பஸ்சை நிறுத்தி மோதல் டிரைவர், கண்டக்டர்கள் கைது
ரோட்டில் பஸ்சை நிறுத்தி மோதல் டிரைவர், கண்டக்டர்கள் கைது
ADDED : ஜன 23, 2026 05:03 AM
கோவைcநடுரோட்டில் பஸ்சை நிறுத்தி மோதலில் ஈடுபட்ட, தனியார் பஸ் டிரைவர்கள், மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை, மேட்டுப்பாளையம் ரோடு, காமராஜர் புரம் சிக்னல் அருகில், என்.எஸ்.எம்., மற்றும் ஸ்ரீ முருகன் ஆகிய தனியார் டவுன் பஸ்கள் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது.
யார் முன்னே செல்வது என்பது தொடர்பாக இரு பஸ் டிரைவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, நடுரோட்டில் பஸ்சை நிறுத்தியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, என்.எஸ்.எம்., பஸ் டிரைவர் கோகுல்நாத்,35, நடத்துனர் மோகன்ராஜ்,30, ஸ்ரீ முருகன் பஸ் டிரைவர் கார்த்திக்,35, நடத்துனர் பாலச்சந்திரன்,32,ஆகியோரை கைது செய்தனர்.

