sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாலையோரங்களில் கட்டடக்கழிவு அவதிக்குள்ளாகும் ஓட்டுநர்கள்

/

சாலையோரங்களில் கட்டடக்கழிவு அவதிக்குள்ளாகும் ஓட்டுநர்கள்

சாலையோரங்களில் கட்டடக்கழிவு அவதிக்குள்ளாகும் ஓட்டுநர்கள்

சாலையோரங்களில் கட்டடக்கழிவு அவதிக்குள்ளாகும் ஓட்டுநர்கள்


ADDED : செப் 05, 2025 09:27 PM

Google News

ADDED : செப் 05, 2025 09:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறையில், சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள கட்டடக்கழிவுகளால் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில் புதியதாக கட்டுமானப்பணிகள் நடக்கிறது. இந்நிலையில், இடிக்கப்பட்ட பழைய கட்டட கழிவுகளை, லாரியில் கொண்டு வந்து பொள்ளாச்சி சாலையோரங்களில் கொட்டுகின்றனர்.

இதே போல், சோலையாறுடேம், புதுத்தோட்டம், கருமலை உள்ளிட்ட வழித்தடத்தில் சாலையோரங்களில் விதிமுறை மீறி கட்டடக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. காற்றுக்கு கழிவுகளில் இருந்து மண் பறக்கும் போது, வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இதை கண்டு கொள்ளாததால், சாலையோரங்களில் விதிமுறை மீறி மண் உள்ளிட்ட கட்டட கழிவு குவிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மழை பெய்யும் போது சாலையில் மண் தேங்குவதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துள்ளாகின்றனர். மேலும், சாலையோரம் கொட்டப்படும் மண் குவியலால், வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியாமல் விபத்துக்குள்ளாகின்றன.

பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகரில் சமீபகாலமாக புதிய கட்டடங்கள் கட்டும் போது, கட்டடக்கழிவுகளை லாரி வாயிலாக எடுத்துச் சென்று, நெடுஞ்சாலைத்துறை ஓரத்தில் கொட்டுகின்றனர். இதனால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

சாலையோரங்களில் விதிமுறை மீறி கட்டடக்கழிவு கொட்டப்படுவதை தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவு மண் கொட்டும் லாரியை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us