sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓட்டுநர்கள் சிந்தனையை சிதறவிடாதீங்க! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை

/

ஓட்டுநர்கள் சிந்தனையை சிதறவிடாதீங்க! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை

ஓட்டுநர்கள் சிந்தனையை சிதறவிடாதீங்க! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை

ஓட்டுநர்கள் சிந்தனையை சிதறவிடாதீங்க! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை


ADDED : செப் 11, 2025 09:31 PM

Google News

ADDED : செப் 11, 2025 09:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; சாலை பாதுகாப்பு குறித்து அரசு கல்லுாரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில், சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி கலையரங்கில் நடந்த முகாமுக்கு, முதல்வர் ஜோதிமணி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பெரியசாமி வரவேற்றார்.

நிகழ்ச்சியில், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் செழியன் பேசியதாவது: சாலை விதிகளை கடைபிடிக்காமல் வாகனங்களை இயக்குவதால் தான் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. அதிகவேகமாக வாகனங்களை இயக்குவதாலும், முந்தி செல்ல முற்படும் போது கவனக்குறைவாலும் தான் அதிகமாக விபத்துகள் நடக்கிறது.

சாலையில் வாகனங்கள் ஓட்டும் போது, சிந்தனைகளை சிதறவிடாமல் கவனமாக ஓட்ட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மொபைல்போன் பேசியபடி வாகனங்களை இயக்க கூடாது.

காரில் பயணம் செய்யும் போது, 'சீட் பெல்ட்' கட்டாயம் அணிய வேண்டும். இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும்.

லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்ககூடாது. குறிப்பாக, 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதோடு, பெற்றோர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடமுண்டு.

இவ்வாறு, பேசினார்.

கோவை மாவட்ட, முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் கலந்து கொண்டு, விபத்துகள் ஏற்படாமல் தடுப்பது குறித்தும், சாலைவிதிமுறைகளை கடைபிடிப்பது குறித்தும் பேசினார்.

நிகழ்ச்சியில், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் ரூபா, உமாமகேஸ்வரி, சங்கர் மற்றும் போராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us