sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோட்டில் பள்ளத்தால் அச்சம் ஓட்டுநர்கள் கவனமா போங்க!

/

ரோட்டில் பள்ளத்தால் அச்சம் ஓட்டுநர்கள் கவனமா போங்க!

ரோட்டில் பள்ளத்தால் அச்சம் ஓட்டுநர்கள் கவனமா போங்க!

ரோட்டில் பள்ளத்தால் அச்சம் ஓட்டுநர்கள் கவனமா போங்க!


ADDED : செப் 30, 2024 06:46 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறையில், ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்துள்ளனர்.

வால்பாறை நகரில் இருந்து, கருமலை பாலாஜி கோவில் செல்லும் வழித்தடத்தில், பல்வேறு இடங்களில் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தியன் வங்கி அருகே மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில், ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், 'நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால், கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்லும் போது, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவுநீர் செல்லும் பாதையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, ரோட்டில் விரிசலும் ஏற்பட்டுள்ளது.

பெரிய அளவில் விபத்து ஏற்படாமல் தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடுப்பு வைக்கபட்டுள்ளது. மழைக்கு பின் ரோடு சீரமைக்கும் பணி துவங்கப்படும். அது வரை இந்த ரோட்டில் செல்லும் வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us