sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தமிழகத்தில் அதிகரிக்கிறது போதை கலாசாரம்: பிரேமலதா

/

 தமிழகத்தில் அதிகரிக்கிறது போதை கலாசாரம்: பிரேமலதா

 தமிழகத்தில் அதிகரிக்கிறது போதை கலாசாரம்: பிரேமலதா

 தமிழகத்தில் அதிகரிக்கிறது போதை கலாசாரம்: பிரேமலதா


ADDED : நவ 23, 2025 06:53 AM

Google News

ADDED : நவ 23, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகரித்து வருவதால், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில், போதை வாலிபரால் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி ஷாலினி வீட்டிற்கு, நேற்று சென்ற பிரேமலதா, மாணவியின் பெற்றோரிடம் ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

பெண் குழந்தைகளுக்கு சமூக விரோதிகளால் சிறு பிரச்னை ஏற்பட்டாலும், போலீசில் புகார் அளித்து, பேக்சோ சட்டத்தின் வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். மாணவி ஷாலினியை கொன்ற கொலைகாரனுக்கு கடும் தண்டனையை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும்.

தமிழகத்தில் மது புழக்கத்துடன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் தற்போது அதிகரித்துள்ளது. போதை கலாசாரம் பெருகி உள்ளதால் எதிர்காலத்தில் மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். இதனை போலீசார் தடுப்பதில்லை. மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும். இது குறித்து பிரதமர் மோடியிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். தொடர்ந்து வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் ஆகியவற்றில் பிரேமலதா புனித நீராடி விட்டு, ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.






      Dinamalar
      Follow us