/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 25, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தொண்டாமுத்தூர் சிறப்பு எஸ்.ஐ., சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போதைப்பொருள் பயன்படுத்துவதால் சமுதாயத்திற்கும், மாணவர்களுக்கும் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போதை பொருட்களை முற்றிலும் தடுப்பதால், மாணவர்களுக்கும், சமுதாயத்திற்கும் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினார்.
பின், விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.