sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போதை பொருள் கடத்தல் வழக்கு; கேரள ஆசாமிக்கு 15 ஆண்டு சிறை

/

போதை பொருள் கடத்தல் வழக்கு; கேரள ஆசாமிக்கு 15 ஆண்டு சிறை

போதை பொருள் கடத்தல் வழக்கு; கேரள ஆசாமிக்கு 15 ஆண்டு சிறை

போதை பொருள் கடத்தல் வழக்கு; கேரள ஆசாமிக்கு 15 ஆண்டு சிறை


ADDED : ஆக 11, 2025 11:29 PM

Google News

ADDED : ஆக 11, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் கடத்திய கேரள ஆசாமிக்கு, 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், மசினகுடி போலீசார் 2022, மே 13ல், கக்கனல்லா சோதனை சாவடியில், வாகன சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த, கேரள பதிவு எண் கொண்ட காரை தடுத்து நிறுத்தினர்.

காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடினார். காரை சோதனையிட்ட போது, 100 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக சிந்தடிக் போதை பொருள் கடத்தியது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிந்து, தப்பி ஓடிய ஆசாமியை தேடி வந்தனர். இந்நிலையில், மே 21ல், கூடலூர் தேவர் சோலை ரோட்டில், சோதனையிட்ட போது, ஏற்கனவே தப்பி ஓடிய ஆசாமி சிக்கினார். அவரிடமிருந்து மேலும், 15 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில், போதை பொருள் கடத்தியது கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த அஜ்மல்,26, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, கோவை இன்றியமையா பொருட்கள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றம் சாட்டப்பட்ட அஜ்மல்லிற்கு, 15 ஆண்டுசிறை, 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சிவகுமார் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us