sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

துடியலூர் புதிய தாலுகா அலுவலகம்... எதிர்பார்ப்பு!வடக்கு தாலுகாவை பிரிக்க வலியுறுத்தல்

/

துடியலூர் புதிய தாலுகா அலுவலகம்... எதிர்பார்ப்பு!வடக்கு தாலுகாவை பிரிக்க வலியுறுத்தல்

துடியலூர் புதிய தாலுகா அலுவலகம்... எதிர்பார்ப்பு!வடக்கு தாலுகாவை பிரிக்க வலியுறுத்தல்

துடியலூர் புதிய தாலுகா அலுவலகம்... எதிர்பார்ப்பு!வடக்கு தாலுகாவை பிரிக்க வலியுறுத்தல்


ADDED : ஜன 05, 2024 11:05 PM

Google News

ADDED : ஜன 05, 2024 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தை இரண்டாக பிரித்து, துடியலுாரை தலைமை இடமாக கொண்டு தாலுகா அலுவலகத்தை அமைக்க வேண்டும்.

தற்போது, உள்ள தாலுகா அலுவலகத்திற்கு பொதுமக்கள் பல கி.மீ., துாரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. கோவை வடக்கு தாலுகாவில் கவுண்டம்பாளையம், துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய வட்டாரங்கள் உள்ளன. இதற்கு, துடியலுார் மையப்பகுதியாக இருப்பதால், அனைத்து பகுதிகளில் இருந்தும் துடியலுாருக்கு சுலபமாக வந்து செல்லலாம்.

பெரியநாயக்கன்பாளையம் பிர்காவில் நாயக்கன்பாளையம், கூடலுார், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, பிளிச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம், குருடம்பாளையம் ஆகிய வருவாய் கிராமங்கள் உள்ளன. துடியலுார் பிர்காவில் எண். 24 வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னி மடை, சோமையம்பாளையம், கவுண்டம்பாளையம், துடியலுார் ஆகிய வருவாய் கிராமங்கள் உள்ளன.

தற்போது, கவுண்டம்பாளையம், துடியலுார், பெரியநாயக்கன்பாளையம், சின்ன தடாகம் வட்டாரங்களில் வேகமாக குடியிருப்புகளும், அதன் தொடர்பாக சட்ட பிரச்னைகளும், வருவாய்த்துறை பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. துடியலுார், கவுண்டம்பாளையம் பகுதிகளில் உருவாக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷன், கோவை மாநகர காவல் துறையுடன் இணைக்கப்பட்டு விட்டது.

பொதுவாக, மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தும் அனைத்து வருவாய் துறை தொடர்பான அரசு பணிகளும் வட்டாட்சியர் மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில், வருவாய் துறையின் வசதிக்காக, சட்டம் - ஒழுங்கு பராமரிக்கவும், பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய சான்றிதழ்களைப் பெற, நீண்ட தூரம் அலைவதை தடுக்க, கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தை இரண்டாக பிரித்து, துடியலுாரில் புதிய தாலுகா அலுவலகத்தை அமைக்க முன்வர வேண்டும்.

மேலும், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை ஊராட்சிக்குட்பட்ட சாமநாயக்கன்பாளையம், காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளையும், துடியலுார் தாலுகா அலுவலகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுத்து உள்ளது.






      Dinamalar
      Follow us