sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குறைந்து வரும் பருவமழை பாசன விவசாயிகள் கவலை

/

குறைந்து வரும் பருவமழை பாசன விவசாயிகள் கவலை

குறைந்து வரும் பருவமழை பாசன விவசாயிகள் கவலை

குறைந்து வரும் பருவமழை பாசன விவசாயிகள் கவலை


ADDED : நவ 11, 2024 05:36 AM

Google News

ADDED : நவ 11, 2024 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வடகிழக்குப்பருவ மழை குறைந்து வருவதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப்பருவ மழையினால், பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் முதல் வடகிழக்குப்பருவ மழை துவங்கி தொடர்ந்து பெய்து வந்தது. கடந்த ஒரு வாரமாக மழைப்பொழிவு குறைந்து வெயில் நிலவுகிறது.

அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதோடு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மழைப்பொழிவு குறைந்த நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 154.42 அடியாக சரிந்தது.

இதே போல், 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம், 118.65 நேற்று காலை, அடியாகவும், 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 71.30 நேற்று காலை அடியாகவும் காணப்பட்டது.






      Dinamalar
      Follow us