sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வால்பாறை செல்ல இ-பாஸ் நடைமுறை.. இன்று முதல்! கவியருவி செல்லவும் பதிவு கட்டாயம்

/

வால்பாறை செல்ல இ-பாஸ் நடைமுறை.. இன்று முதல்! கவியருவி செல்லவும் பதிவு கட்டாயம்

வால்பாறை செல்ல இ-பாஸ் நடைமுறை.. இன்று முதல்! கவியருவி செல்லவும் பதிவு கட்டாயம்

வால்பாறை செல்ல இ-பாஸ் நடைமுறை.. இன்று முதல்! கவியருவி செல்லவும் பதிவு கட்டாயம்


ADDED : நவ 01, 2025 12:07 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. ஆழியாறு கவியருவிக்கு செல்வோரும் இந்த நடைமுறை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை சுற்றுலா தலமாக உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர். பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணியர், இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.இதையடுத்து, இன்று முதல் இ-பாஸ் நடைமுறைக்கு வருகிறது.

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆழியாறு சோதனைச்சாவடியிலும், கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்துக்குள் வரும் சோலையாறு அணை இடதுகரை (மழுக்குப்பாறை வழி) சோதனை சாவடியிலும், இ-பாஸ் பதிவு செய்யலாம், அங்கு இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

பொள்ளாச்சி அருகே ஆழியாறு சோதனைச்சாவடியில், இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்படுவது, முன்னேற்பாடு பணிகளை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார். சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்வின் போது, இ-பாஸ் நடைமுறைப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். சுற்றுலா பயணியர் முறையாக பாஸ் பெற்றுள்ளனரா என்பதை ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தினார்.

மேலும், ஆழியாறு சோதனைச்சாவடி அருகே, 'க்யூஆர்' கோடுடன் பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அதில், வால்பாறை செல்ல, 'க்யூஆர்' கோட்டை ஸ்கேன் செய்து, இ-பாஸ் பெறுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிமுறை குறித்து தெரியாத சுற்றுலா பயணியருக்கு வழிகாட்டுதல் செய்து, இ-பாஸ் எடுக்க வழிவகை செய்யலாம், என, அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆழியாறு கவியருவிக்கு சுற்றுலா பயணியர் அதிகளவு வருகின்றனர். கவியருவிக்கு ஆழியாறு சோதனைச்சாவடியை கடந்து செல்ல வேண்டும். கவியருவி செல்வதாக கூறி வால்பாறைக்கு பயணிக்க வாய்ப்புள்ளது.இதை தவிர்க்க கவியருவிக்கு செல்லவும் இ-பாஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமியிடம் கேட்ட போது, ''ஆழியாறு சோதனைச்சாவடி கடந்து செல்ல வேண்டுமானால், இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும். கவியருவிக்கு செல்வதாக கூறி வால்பாறை சென்றால் கண்காணிக்க முடியாது. இதை தவிர்க்க கவியருவிக்கு செல்லவும் இ-பாஸ் பெற வேண்டும்,'' என்றார்.

விண்ணப்பிப்பது எப்படி!

https://www.tnepasstngov.in/home என்ற இணையதளத்திற்குள் சென்று இந்தியாவுக்குள் உள்ளே, வெளியே என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். மொபைல்போன் எண்ணை பதிவிட்டு, 'கேப்சா' பதிவிட்டதும், ஓ.டி.பி. வரும். அதன்பின், நீலகரி, கொடைக்கானல், வால்பாறை, உள்ளூர் பாஸ், முந்தைய பாஸ் என வரும். அதில், வால்பாறை என்பதை தேர்வு செய்த பின், விண்ணப்பதாரர் பெயர், வருகைக்கான காரணம், வாகன பதிவு எண், பயணியர் எண்ணிக்கை, வாகன தயாரிப்பு ஆண்டு, வாகன வகை, எரிபொருள் வகை, உள்ளே நுழையும் நாள், வெளியேறும் நாள், மாநிலம், மாவட்டம் மற்றும் முகவரி பதிவு செய்த பின், இ-பாஸ் பெறலாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us