sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திருப்பரங்குன்றம் சம்பவம் எதிரொலி: ஹிந்து அமைப்புகள் பிப்., 4ல் ஆர்ப்பாட்டம்

/

திருப்பரங்குன்றம் சம்பவம் எதிரொலி: ஹிந்து அமைப்புகள் பிப்., 4ல் ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் சம்பவம் எதிரொலி: ஹிந்து அமைப்புகள் பிப்., 4ல் ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் சம்பவம் எதிரொலி: ஹிந்து அமைப்புகள் பிப்., 4ல் ஆர்ப்பாட்டம்

5


ADDED : ஜன 27, 2025 06:29 AM

Google News

ADDED : ஜன 27, 2025 06:29 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; ''திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை களங்கப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பிப்., 4ல் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என, ஹிந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.

கோவை மாவட்டம், ஆனைமலை வேட்டைக்காரன்புதுாரில், ஹிந்து முன்னணியின் கோவை கோட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.

இதில், கலந்து கொண்ட மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் முருகனின் புனிதத்தலத்தை, களங்கப்படுத்தும் நபர்களை தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலையின் மீது ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்தன்று, தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

இருப்பினும், தமிழக அரசு, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால், ஹிந்துக்களுக்கு சொந்தமான வழிபாட்டுத்தலத்தை பிற மதத்தினர் உரிமை கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

எஸ்.பி.டி.ஐ., அமைப்பைச் சேர்ந்தவர்கள், திருப் பரங்குன்றம் மலை மீது சென்று, ஆடு, கோழி வெட்டுவோம் என, தெரிவித்துள்ளனர்.

அதனை, ஹிந்து முன்னணி போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்தியுள்ளது.அந்த அமைப்புக்கு ஆதரவாக ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, எம்.எல்.ஏ., ஆகியோர், மலைமீது சென்று பிரியாணி உட்கொண்டுள்ளனர்.

ஹிந்துக்கள் ஓட்டு பெற்று தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், ஒருமதத்தை சார்ந்து செயல்படுகின்றனர். அவர்களின் மீது நடவடிக்கைக் கோரி, ஹிந்து அமைப்புகள் ஒன்றிணைந்து, பிப்., 4ல், அப்பகுதியில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக அரசு இருத்தல் வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us