/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதித்யா கல்லுாரியில் பொருளாதார கருத்தரங்கு
/
ஆதித்யா கல்லுாரியில் பொருளாதார கருத்தரங்கு
ADDED : மார் 22, 2025 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மூன்றாவது சர்வதேச கருத்தரங்கு நடந்தது. இதில், இலங்கைபொருளாதார நிபுணரும், கொழும்பு பல்கலையின் மூத்த பேராசிரியருமான அமிர்தலிங்கம், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவர், இந்தியா - இலங்கை இடையிலான, பொருளாதார மேம்பாடுகள் குறித்தும், தற்போது இலங்கையில்நிலவி வரும் பொருளாதார சிக்கல் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும், மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
கருத்தரங்க மலரையும் வெளியிட்டார்.200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.