sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுரங்கப் பாதைகளில் கூடுதலாக எட்டு மோட்டார்கள்; மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை

/

சுரங்கப் பாதைகளில் கூடுதலாக எட்டு மோட்டார்கள்; மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை

சுரங்கப் பாதைகளில் கூடுதலாக எட்டு மோட்டார்கள்; மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை

சுரங்கப் பாதைகளில் கூடுதலாக எட்டு மோட்டார்கள்; மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை


ADDED : நவ 01, 2024 10:35 PM

Google News

ADDED : நவ 01, 2024 10:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் இடங்களில் உடனுக்குடன் அகற்றுவதற்காக, கூடுதல் மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

கோவை மாநகர பகுதியில் மழை பெய்தால் லங்கா கார்னர், உப்பிலிபாளையம் அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தின் சுரங்கப் பாதை, காளீஸ்வரா மில், கிக்கானி ரயில்வே பாலம் மற்றும் வடகோவை சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்குவது வாடிக்கை. இவற்றை வெளியேற்ற மோட்டார் பம்ப்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

குறுகிய நேரத்தில் அதிகமான தண்ணீர் வந்து விடுவதால், சுரங்கப்பாதை முழுவதும் நிரம்பி விடுகிறது. கடந்த முறை மழை பெய்து மின்சாரம் தடைபட்டதால், மோட்டார் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தண்டவாளத்தை தொடும் அளவுக்கு தண்ணீர் தேங்கியது.

இன்னும் சில மணி நேரம் மழை தொடர்ந்திருந்தால், வேறு விதமான அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பிருந்ததால், உஷாரடைந்த மாநகராட்சி நிர்வாகம், தண்ணீர் தேங்கும் அனைத்து இடங்களிலும் கூடுதல் மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

காளீஸ்வரா மில் பாலத்தில் ஏற்கனவே, 20 எச்.பி., மோட்டார், 125 கேவிஏ திறனுள்ள ஜெனரேட்டர் வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, 36 எச்.பி., ஒன்று, 21 எச்.பி., மோட்டார் இரண்டு பொருத்தப்பட்டுள்ளன. லங்கா கார்னரில், 20 எச்.பி., மோட்டார், 82.5 கேவிஏ ஜெனரேட்டர் உள்ளன. கூடுதலாக, 21 எச்.பி., மோட்டார் வைக்கப்பட்டுள்ளது.

கிக்கானி பாலத்தில் 20 எச்.பி., இரண்டு மற்றும் 7.5 எச்.பி., மோட்டார், 125 கேவிஏ ஜெனரேட்டர் இருக்கின்றன. கூடுதலாக, 28 எச்.பி., மோட்டார் வைக்கப்பட்டுள்ளன. அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தில், 30 எச்.பி., இரண்டு, 12 எச்.பி., - 50 எச்.பி., - 40 எச்.பி., - 20 எச்.பி., மோட்டார்கள், 160 கேவிஏ திறனுள்ள ஜெனரேட்டர் உள்ளன. கூடுதலாக, 28 எச்.பி., - 24 எச்.பி., - 28 எச்.பி., மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. கூடுதலாக, எட்டு மோட்டார்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வரும் நாட்களில் மழைப்பொழிவு கூடுதலாக பெய்ய வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் இருக்கிறது. சுரங்கப்பாதைகளில் ஏற்கனவே, 11 மோட்டார் பம்ப்கள் உள்ளன. கூடுதலாக எட்டு மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன. செல்வ சிந்தாமணி குளத்தில் மதகு லேசாக திறக்கப்பட்டு, குடியிருப்புக்குள் தண்ணீர் புகாத அளவுக்கு வெளியேற்றப்படுகிறது' என்றனர்.

கவனியுங்க!

மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக வாய்க்கால் துார்வாரிய இடங்களில் கடந்த முறை தண்ணீர் தேங்கவில்லை. அதேநேரம், அதிகாரிகள் அலட்சியமாக இருந்த இடங்களில், எதிர்பார்க்காத அளவுக்கு தண்ணீர் தேங்கி, பாதிப்பை உண்டாக்கியது.பாப்பநாயக்கன்பாளையத்தில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர் லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில் காருண்யா மையம் வரை தேங்குகிறது; சங்கனுார் பள்ளத்துக்குச் செல்ல வேண்டிய தண்ணீர், வாய்க்கால் அடைப்பால் ரோட்டில் தேங்குகிறது. புதிதாக மேம்பாலம் கட்டி வரும் மாநில நெடுஞ்சாலைத்துறையினர், இப்பகுதியில் இன்னும் மழை நீர் வடிகால் கட்டவில்லை; அங்குள்ள பாலத்தை அகலப்படுத்தவும் இல்லை. அதனால், ரோட்டில் மழை நீர் தேங்குகிறது.சில மாதங்களுக்கு முன், இப்பகுதியில் குப்பை தொட்டியை அகற்றியபோது, மின்சாரம் தாக்கி, துாய்மை பணியாளர்கள் துாக்கி வீசப்பட்டனர்; அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டனர். இவ்விஷயத்தில் மாநகராட்சி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதேபோல், லாலி ரோடு சந்திப்பு பகுதியில் தற்போது ரவுண்டானா அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கும் மழை நீர் வழிந்தோட வழியின்றி, ரோட்டில் தேங்குகிறது. இவ்விடங்களை கள ஆய்வு செய்து, வாய்க்கால் துார்வார துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us