sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மது விற்ற எட்டு பேர் கைது: 600 பாட்டில்கள் பறிமுதல்

/

மது விற்ற எட்டு பேர் கைது: 600 பாட்டில்கள் பறிமுதல்

மது விற்ற எட்டு பேர் கைது: 600 பாட்டில்கள் பறிமுதல்

மது விற்ற எட்டு பேர் கைது: 600 பாட்டில்கள் பறிமுதல்


ADDED : பிப் 13, 2025 12:14 AM

Google News

ADDED : பிப் 13, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தைப்பூசம் விடுமுறையில் சட்ட விரோதமாக, மது விற்பனை செய்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 614 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தைப்பூசம் விடுமுறை தினத்தில், கோவை மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம் செல்வபுரம் பகுதிகளில், சோதனை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த சிவகங்கையை சேர்ந்த ராம்கி, 27 மற்றும் கருப்பையா, 47 தெலுங்குபாளையத்தை சேர்ந்த திருமலை குமார், 46, ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 106 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

* வைசியாள் வீதியில் மது விற்பனை செய்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபு, 44, புதுக்கோட்டையை சேர்ந்த முருகானந்தம், 36; வெரைட்டி ஹால் ரோட்டில் மது விற்பனை செய்த புதுக்கோட்டையை சேர்ந்த விஜய், 31, கருணாநதி, 52, உக்கடம், லங்கா கார்னர் பகுதியில் மது விற்ற திருவாரூரை சேர்ந்த வேலாயுதம், 26 ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மொத்தம், 508 பாட்டில்கள் மற்றும் ரூ. 7,150 பணம் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us