ADDED : ஆக 20, 2025 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை வடவள்ளி ஐ.ஓ.பி., காலனியை சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன், 67. கடந்த, 15ம் தேதி வீட்டின் ஜன்னல் கண்ணாடியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் அவர் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

