/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
ADDED : ஜூலை 08, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; வீட்டில் யு.பி.எஸ்., பழுது நீக்கும் போது, மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலியானார்.
கோவை வீரியம்பாளையம் படேல் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார், 38; எலக்ட்ரீஷியன். இவர் நேற்று முன்தினம், வீட்டில் யு.பி.எஸ்., யூனிட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.
இதைப்பார்த்த அவரது மனைவி சத்தம் போட்டார். அருகிலிருந்தவர்கள் வந்து வினோத்குமாரை மீட்டனர். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பீளமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.