/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 16, 2025 09:18 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, நெகமம், அங்கலக்குறிச்சியில், மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (18ம் தேதி) நடக்கிறது.
பொள்ளாச்சி அருகே, நெகமம் கோட்டத்துக்கான மின்வாரிய குறைதீர் கூட்டம் நாளை காலை, 11:00 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையில் நடக்கிறது. நெகமம் செயற்பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அனைத்து மின்நுகர்வோர்களும் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
இத்தகவலை நெகமம் மின்வாரியசெயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.
* அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நாளை, காலை, 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. அங்கலக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது. இத்தகவலை, அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.