sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஜீப்பை கவிழ்த்த ஒற்றை யானை உயிர் தப்பிய மின் ஊழியர்கள்

/

ஜீப்பை கவிழ்த்த ஒற்றை யானை உயிர் தப்பிய மின் ஊழியர்கள்

ஜீப்பை கவிழ்த்த ஒற்றை யானை உயிர் தப்பிய மின் ஊழியர்கள்

ஜீப்பை கவிழ்த்த ஒற்றை யானை உயிர் தப்பிய மின் ஊழியர்கள்


ADDED : ஜன 24, 2025 02:09 AM

Google News

ADDED : ஜன 24, 2025 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி,:பொள்ளாச்சி அருகே ரோட்டில் வலம் வந்த ஒற்றை யானை, அவ்வழியாக சென்ற மின்வாரிய அதிகாரிகளின் ஜீப்பை பள்ளத்தில் தள்ளி விட்டது. மூன்று ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், ஒற்றை யானை சில மாதங்களாக உலா வருகிறது. ஆழியாறு கவியருவி, அணை அருகே இதன் நடமாட்டம் உள்ளதால், வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஆழியாறு அருகே, நவமலை மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து மின்வாரிய இளநிலை பொறியாளர் விஸ்வநாதன், 54, ஊழியர்கள் செல்வராஜ், 50, சந்தோஷ், 45, ஆகியோருடன், வழக்கமான அலுவல் பணிகளை முடித்து, மேல் ஆழியாறுக்கு ஜீப்பில் சென்றனர்.

நவமலை ஆதாளி அம்மன் கோவில் அருகே சென்ற போது, ரோடு திருப்பத்தில் யானை வருவதை கண்ட மின்வாரிய ஊழியர்கள், வாகனத்தை, 'ரிவர்ஸ்' எடுத்தனர். அப்போது, ஒற்றை யானை வேகமாக ஓடி வந்து, வாகனத்தின் முன்பகுதியை அழுத்தி, 10 அடி பள்ளத்தில் தள்ளியது. வாகனத்தில் இருந்த, மின்வாரிய ஊழியர்கள் சப்தம் எழுப்பாமல் அமைதியாக இருந்தனர்.

யானை நகர்ந்து சென்ற பின், மூவரும் லேசான காயத்துடன்ஜீப்பில் இருந்து வெளியே வந்தனர். ஆழியாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று ஆழியாறு போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதற்கான வீடியோவையும் போலீசில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us