sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கோவையில் ரூ.8 கோடியில் யானைகள் முகாம்: 20 மாதமாகியும் திறப்பு விழா நடக்கவில்லை

/

 கோவையில் ரூ.8 கோடியில் யானைகள் முகாம்: 20 மாதமாகியும் திறப்பு விழா நடக்கவில்லை

 கோவையில் ரூ.8 கோடியில் யானைகள் முகாம்: 20 மாதமாகியும் திறப்பு விழா நடக்கவில்லை

 கோவையில் ரூ.8 கோடியில் யானைகள் முகாம்: 20 மாதமாகியும் திறப்பு விழா நடக்கவில்லை


ADDED : நவ 13, 2025 11:15 PM

Google News

ADDED : நவ 13, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: சாடிவயலில், புதியதாக அமைக்கப்பட்டுள்ள யானைகள் முகாம் பணிகள், முடிந்தும் திறப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது.

கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம், சாடிவயலில், கடந்த, 2012ம் ஆண்டு யானைகள் முகாம் துவங்கப்பட்டது. கும்கி யானைகள் வளர்க்கப்பட்டு, கோவை மாவட்டத்தில், காட்டு யானைகளை கட்டுப்படுத்த தேவைப்பட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த, 2020ம் ஆண்டு நவம்பர் மாதம், இங்கிருந்த கும்கி யானை, டாப்சிலிப் கொண்டு செல்லப்பட்டது. அதன்பின், இங்கு மீண்டும் கும்கி யானைகள் கொண்டுவரப்படவில்லை.

இந்நிலையில், சாடிவயலில், 8 கோடி ரூபாய் செலவில், யானைகள் முகாம் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, யானைகள் முகாம் பணிக்கு, டெண்டர் விடப்பட்டு கடந்தாண்டு ஏப்ரல் மாதம், சாடிவயலில், 50 ஏக்கர் பரப்பளவில், முகாம் பணிகள் துவங்கின.

பழைய யானைகள் முகாமில் இருந்த வசதிகளை புனரமைத்தும், கூடுதலாக, 18 புதிய யானைகள் ஷெட், 2 கரோல், இரண்டு கி.மீ., தொலைவிற்கு சோலார் மின்வேலி, 40 சோலார் விளக்குகள், 3 சிறிய குட்டைகள், பாகன்கள் தங்கும் விடுதிகள், 20 இடங்களில் தண்ணீர் வசதி, 5 யானைகள் குளிப்பதற்கான ஷவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, போர்வெல், சி.சி.டி.வி., கேமராக்கள், யானைகள் முகாமை சுற்றி அகழி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. ஆனால், இன்னும், புதிய சாடிவயல் யானைகள் முகாம் திறக்கப்படாமலே உள்ளது.

இந்த வனச்சரகத்தில், தினசரி காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதும், விளைநிலங்களுக்குள் புகுவதும், மனித விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. மக்களை காக்க வரும் வனத்துறையினரும், காட்டு யானைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, புதிதாக கட்டப்பட்ட யானைகள் முகாமை திறந்து, கும்கி யானைகள் கொண்டு வர வேண்டியது அவசியம்.

ஆனால், 20 மாதங்களாக, பணிகள் மேற்கொள்ளப்படுவதாக, தொடர்ந்து வனத்துறையினர் கூறி வருவதால், இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 8 கோடி ரூபாயும் பயனில்லாமல் முடங்கிவிட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அனுமதி கோரியுள்ளோம் ''சாடிவயல் யானைகள் முகாமில், இன்னும் சில பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இம்மாத இறுதிக்குள் அப்பணிகளும் நிறைவடையும். திறப்பு விழாவிற்கு, அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அதோடு, யானைகளும் கொண்டுவர வேண்டும். இதற்கான அனுமதி கிடைத்தால், அடுத்த மாதத்தில், யானைகள் முகாம் திறக்க வாய்ப்புள்ளது. - ஜெயராஜ், மாவட்ட வன அலுவலர்






      Dinamalar
      Follow us