sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாட்டு கொட்டகையை சேதப்படுத்திய யானை

/

மாட்டு கொட்டகையை சேதப்படுத்திய யானை

மாட்டு கொட்டகையை சேதப்படுத்திய யானை

மாட்டு கொட்டகையை சேதப்படுத்திய யானை


ADDED : ஏப் 23, 2025 11:05 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம், ; சின்னதடாகம் அருகே வீரபாண்டி புதூரில் உள்ள தோட்டத்தில் மாட்டு கொட்டகையை காட்டு யானை சேதப்படுத்தியது.

கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் காட்டு யானைகளின் தொந்தரவு தினசரி அதிகரித்து வருகிறது. வேளாண் நிலங்களுக்குள் புகும் யானைகள், காட்டு பன்றிகள், பயிர்களை சேதப்படுத்துகின்றன. வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும், வனவிலங்குகளின் தொல்லைகளை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.

இந்நிலையில், சின்னதடாகம் அருகே வீரபாண்டி புதூரில் சுந்தரேசன் தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை, அங்கிருந்த மாட்டு கொட்டகையை கீழே தள்ளி சேதப்படுத்தியது. அதே பகுதியில் சிறிது நேரம் சுற்றித்திரிந்த ஒற்றையானை பின்னர் மலையடிவாரம் நோக்கி சென்றது.

இது குறித்து, விவசாயி சுந்தரேசன் கூறுகையில், காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள, 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தோம். காட்டு யானைகளின் தொந்தரவால் தற்போது இந்த பூமி வெறும் தரிசாக கிடக்கிறது.

இரவு நேரங்களில் காட்டு யானைகளின் தொந்தரவால், தோட்டத்து சாளைகளில் விவசாயிகள் தங்க முடிவதில்லை. வேளாண் பயிர்களுக்கான நஷ்ட ஈடும் குறைவாகவே வழங்கப்படுகிறது. அவையும் குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை. வனவிலங்குகளின் தொந்தரவுக்கு நிலையான தீர்வு ஏற்பட்டால் மட்டுமே, மலையோர கிராமங்களில் விவசாயிகள், வேளாண் தொழிலை தொடர்ந்து செய்ய முடியும் என்றார்.






      Dinamalar
      Follow us