/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு; உச்சநீதிமன்ற உத்தரவு அமலாகுமா?
/
யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு; உச்சநீதிமன்ற உத்தரவு அமலாகுமா?
யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு; உச்சநீதிமன்ற உத்தரவு அமலாகுமா?
யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு; உச்சநீதிமன்ற உத்தரவு அமலாகுமா?
ADDED : மே 11, 2025 11:52 PM

வால்பாறை; வால்பாறையில், யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களில், யானைகள் அதிகம் உள்ளன. இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக யானைகள் இடம்பெயர்ந்து வந்த பாதை அழிக்கப்பட்டு, தேயிலை, காபி, ஏலம் போன்றவை பயிரிடப்பட்டுள்ளன.
எஸ்டேட் பகுதியில் யானைகள் நடந்து செல்லும் வழித்தடத்தில், சுற்றுலா பயணியர் தங்குவதற்கு வசதியாக 'ரிசார்ட்கள்' அதிகளவில் கட்டப்பட்டுள்ளன. இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே வால்பாறையில் யானை - மனித மோதல் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் மனித உயிரிழப்பு ஏற்படுகிறது.
இது குறித்து, தமிழக அரசு தனிக்குழு அமைத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வால்பாறையை மறுசர்வே செய்து, யானைகள் வழித்தடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில், இயற்கை வளம் கொஞ்சம், கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் வனத்துறை ஆதரவோடு மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன.
யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக இடம் பெயர்ந்து செல்லும் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவு படி, யானைகள் வழித்தடங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மனித - வனவிலங்கு மோதலை தடுக்க முடியும்.
இவ்வாறு, கூறினர்.