/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.ஆர்.பி.எப்., வளாகத்துக்குள் நுழைந்த யானை
/
சி.ஆர்.பி.எப்., வளாகத்துக்குள் நுழைந்த யானை
ADDED : மார் 16, 2026 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: துடியலுார் அருகேயுள்ள சி.ஆர்.பி.எப்., வளாகத்தில், காட்டு யானை நுழைந்து அரிசி, பருப்பு உட்பட தானியங்களை ருசி பார்த்தது.
கோவை வடக்கு புறநகர் பகுதிகளில், காட்டு யானைகளின் வரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, துடியலுார் அருகே கதிர் நாயக்கன்பாளையத்தில் சி.ஆர்.பி.எப்., வளாகத்தில் உள்ள சமையல் அறையில், காட்டு யானை ஒன்று நுழைந்து, அங்கிருந்து அரிசி, பருப்பு உட்பட தானியங்களை ருசித்து சேதப்படுத்தியது. சுமார் ஒரு மணி நேரம் வளாகத்துக்குள் இருந்த யானை, பின் அங்கிருந்து சென்றது. இதனால், சி.ஆர்.பி.எப்., வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

