sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ட்ரோன் கேமரா உதவியுடன் யானைகள் கண்காணிப்பு

/

 ட்ரோன் கேமரா உதவியுடன் யானைகள் கண்காணிப்பு

 ட்ரோன் கேமரா உதவியுடன் யானைகள் கண்காணிப்பு

 ட்ரோன் கேமரா உதவியுடன் யானைகள் கண்காணிப்பு


ADDED : டிச 15, 2025 05:15 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரமடை:காரமடை அருகே ட்ரோன் கேமரா உதவியுடன், யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் அன்னூர் காக்காபாளையம் பகுதியில் அண்மையில் தைலமரத் தோப்பில் மூன்று ஆண் காட்டு யானைகள் முகாமிட்டன. இதனை வனத்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து, யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே இந்த 3 யானைகள் நேற்று முன் தினம் மேட்டுப்பாளையம் அருகே குருந்தமலை பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது. இதனை வனத்துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் கண்காணித்தனர். யானைகள் தொடர்ந்து அங்கேயே நேற்றும் முகாமிட்டன. வனத்துறையினரும் 2 வது நாளாக நேற்று ட்ரோன் கேமரா வாயிலாக யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வராமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். யானைகளை பொதுமக்கள் எக்காரணத்தை கொண்டும் தொந்தரவு செய்யக்கூடாது, என்றனர்.






      Dinamalar
      Follow us