sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முகாமிட்ட யானைகள்; தொழிலாளர்கள் தவிப்பு

/

முகாமிட்ட யானைகள்; தொழிலாளர்கள் தவிப்பு

முகாமிட்ட யானைகள்; தொழிலாளர்கள் தவிப்பு

முகாமிட்ட யானைகள்; தொழிலாளர்கள் தவிப்பு


ADDED : அக் 07, 2025 09:03 PM

Google News

ADDED : அக் 07, 2025 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; தேயிலை தோட்டத்தில் பகல் நேரத்தில் முகாமிட்ட யானைகளால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவித்தனர்.

தமிழக --- கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையில், பருவமழைக்கு பின் கேரளாவிலிருந்து மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை வழியாக, நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள், பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனியாக முகாமிட்டுள்ளன.

குறிப்பாக, முடீஸ் பகுதியில் முத்துமுடி, வாகமலை, ைஹபாரஸ்ட் உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளன. இவை பகல் நேரத்தில் தேயிலை எஸ்டேட்டில் முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'யானைகள் நடமாடும் பகுதியில் சுற்றுலா பயணியர் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். பகல் நேரத்தில் தேயிலை எஸ்டேட்டில் யானைகள் முகாமிட்டால், அந்தப்பகுதியில் தொழிலாளர்களை தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதிக்கக்கூடாது. இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வெளியில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us