sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆழியாறு ரோட்டில் யானைகள் நடமாட்டம்! கவனமாக செல்ல வனத்துறை 'அட்வைஸ்'

/

ஆழியாறு ரோட்டில் யானைகள் நடமாட்டம்! கவனமாக செல்ல வனத்துறை 'அட்வைஸ்'

ஆழியாறு ரோட்டில் யானைகள் நடமாட்டம்! கவனமாக செல்ல வனத்துறை 'அட்வைஸ்'

ஆழியாறு ரோட்டில் யானைகள் நடமாட்டம்! கவனமாக செல்ல வனத்துறை 'அட்வைஸ்'


ADDED : மே 29, 2025 11:30 PM

Google News

ADDED : மே 29, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை, ; ஆழியாறில் இருந்து வால்பாறை செல்லும் ரோட்டில் யானைகள் நடமாடுவதால், சுற்றுலா பயணியர் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும், என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.

இந்நிலையில், வால்பாறையிலிருந்து ஆழியாறு செல்லும் ரோட்டில், யானை, காட்டுமாடு, வரையாடு, மான், சிங்கவால்குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பகல் நேரத்திலேயே ரோட்டில் நடமாடுகிறது. குறிப்பாக, உணவு மற்றும் தண்ணீரை தேடி யானைகள் அடிக்கடி ரோட்டை கடக்கின்றன.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் வனவிலங்குகள் அடிக்கடி ரோட்டை கடக்கின்றன. குறிப்பாக, ஆழியாறு சோதனைச்சாவடியை கடந்து வால்பாறை மலைப்பாதையில், யானைகள் ரோட்டில் அடிக்கடி முகாமிடுகின்றன.

இது போன்ற சூழ்நிலையில், வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும். வனப்பகுதிக்குள் யானை செல்லும் வரை, வாகனங்களை இயக்கக்கூடாது.

யானைகளை போட்டோ, வீடியோ எடுக்க கூடாது. வனவிலங்குகளுக்கு இடையூறு இல்லாத வகையில் வாகனத்தில் இருந்தபடியே கண்டு ரசிக்கலாம். யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால், அவைகள் கோபமடைந்து, தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால், சப்தம் எழுப்பாமல், அமைதி காக்க வேண்டும்.

அதை விடுத்து வாகனத்தை விட்டு கிழே இறங்கி, வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றுலா பயணியர் அருகில் செல்லக்கூடாது. மீறினால், வனஉயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us