sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லிங்காபுரத்தில் யானைகள் உலா

/

லிங்காபுரத்தில் யானைகள் உலா

லிங்காபுரத்தில் யானைகள் உலா

லிங்காபுரத்தில் யானைகள் உலா


ADDED : டிச 01, 2024 11:41 PM

Google News

ADDED : டிச 01, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; சிறுமுகை அருகே லிங்காபுரம் பகுதியில் காட்டு யானைகள் குட்டியுடன் உலா வருகின்றன. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதி, வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக லிங்காபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 யானைகள் ஒரு குட்டியுடன் முகாமிட்டு பகல் நேரங்களிலேயே ஊருக்குள் உலா வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் பிற பணிகளுக்கு செல்ல அச்சமடைந்து வருகின்றனர். குழந்தைகள் மிகவும் எச்சரிக்கையுடன் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் இங்கு, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றி விவசாயி ஒருவரை தாக்கி அவர் காயம் அடைந்தார். அதே நாளில் ஆட்டுப்பட்டியில் புகுந்த சிறுத்தை ஆட்டை கவ்வி சென்றது. தற்போது இந்த மாதம் யானைகள் முகாமிட்டுள்ளது, லிங்காபுரம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.-






      Dinamalar
      Follow us