ADDED : நவ 01, 2024 10:09 PM
அ நிறம் | அளவு
வால்பாறை ; வால்பாறையில், பருவமழைக்கு பின் வன வளம் பசுமையாக காணப்படுவதால், கேரளாவில் இருந்து, தமிழக கேரள எல்லையில் உள்ள வால்பாறையில் பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், வால்பாறை அக்காலை எஸ்டேட் கிளை அஞ்சலகத்தை நேற்று முன் தினம் இரவு, இரண்டு யானைகள் இடித்து சேதப்படுத்தின. இந்த சம்பவத்தில் போஸ்ட் ஆபீசில் இருந்த ஆவணங்கள், டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்கள் சேதமாயின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், சேதம் குறித்து போஸ்ட் மாஸ்டரிடம் விசாரணை நடத்தினர்.
