sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாரமேடு ரோட்டில் ஆக்கிரமிப்பு; பள்ளிக்குழந்தைகளுக்கு ஆபத்து

/

சாரமேடு ரோட்டில் ஆக்கிரமிப்பு; பள்ளிக்குழந்தைகளுக்கு ஆபத்து

சாரமேடு ரோட்டில் ஆக்கிரமிப்பு; பள்ளிக்குழந்தைகளுக்கு ஆபத்து

சாரமேடு ரோட்டில் ஆக்கிரமிப்பு; பள்ளிக்குழந்தைகளுக்கு ஆபத்து


ADDED : ஜன 28, 2025 11:57 PM

Google News

ADDED : ஜன 28, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கரும்புக்கடை சாரமேடு பகுதியில், ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, கோவை மாநகராட்சி அலுவலகத்தில், காங்கிரஸ் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில செயலாளர் ரஹமத்துல்லா கொடுத்த மனு:

கோவை, 86வது வார்டு கரும்புக்கடை, சாரமேடு 80 அடி ரோட்டின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து, கட்டடங்கள் கட்டி, வாடகைக்கு விட்டுள்ளனர். ஆக்கிரமிப்புகளால் பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும், இடையூறு ஏற்படுகிறது.

சாரமேடு மெயின் ரோட்டில் ஒரு மாநகராட்சி பள்ளி, நான்கு தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.

பள்ளிக்கு குழந்தைகள் வந்து செல்லும் நேரத்தில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், சாலையோர ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us