/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனிம விதி மீறல்களுக்கு முற்றுப்புள்ளி; ஊழல் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தல்
/
கனிம விதி மீறல்களுக்கு முற்றுப்புள்ளி; ஊழல் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தல்
கனிம விதி மீறல்களுக்கு முற்றுப்புள்ளி; ஊழல் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தல்
கனிம விதி மீறல்களுக்கு முற்றுப்புள்ளி; ஊழல் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 29, 2025 08:44 PM
கோவை; 'கோவை மாவட்ட கனிமவளம் மற்றும் புவியியல் சுரங்கத்துறையில் நடக்கும் ஊழலுக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்று ஊழல் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இயக்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் வேலு, ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:
கோவை மாவட்ட கனிம வளம், புவியியல் மற்றும் சுரங்க துறை அதிகாரிகள் சிலரது துணையுடன் அன்றாடம் விதிமீறல்கள் நடக்கின்றன. இதன் விளைவாக அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
சுரங்கங்களை சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதோடு, நீர் நிலைகள் மாசடைந்து, இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது. கல்குவாரி முறைகேடு விதிமீறல்களால், கிராம மக்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, பொது நலனை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, வேலு கூறியுள்ளார்.