/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில்முனைவோர் பயிற்சி வகுப்பு
/
தொழில்முனைவோர் பயிற்சி வகுப்பு
ADDED : ஜன 22, 2025 07:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு, கோவை பாரதியார் பல்கலையில் வரும் 31ல் நடக்கிறது.
தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் 'ஸ்டார்ட் அப் ' நிறுவனர்களுக்கு 'சாட் ஜி.பி.டி.,' பயன்படுத்தி, வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படுகிறது என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

