sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சோலையாறு அணை பகுதியில் தீயணைப்பு நிலையம் அமையுங்க!

/

சோலையாறு அணை பகுதியில் தீயணைப்பு நிலையம் அமையுங்க!

சோலையாறு அணை பகுதியில் தீயணைப்பு நிலையம் அமையுங்க!

சோலையாறு அணை பகுதியில் தீயணைப்பு நிலையம் அமையுங்க!


ADDED : ஜன 28, 2025 06:59 AM

Google News

ADDED : ஜன 28, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : சோலையாறு அணைப்பகுதியில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், என, எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை நகரில், கடந்த, 21 ஆண்டுகளுக்கு மேலாக தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில், மின் இணைப்பினால், தொழிலாளர்கள் குடியிருப்பில் அடிக்கடி மின் கசிவு ஏற்பட்டு, வீடுகள் தீயில் கருகி விடுகின்றன. இதனால், பல லட்சம் மதிப்பிலான பொருட்களும் சேதமாகின்றன.

இது போன்ற சூழ்நிலையில், வால்பாறை நகரிலிருந்து தொலைதுார எஸ்டேட் பகுதிக்கு, குறிப்பாக, பன்னமேடு, உருளிக்கல், முருகாளி, கல்யாணப்பந்தல், புதுக்காடு, ேஷக்கல்முடி, சோலையாறு அணை பகுதிக்கு, தீயணைப்பு நிலைய வாகனம் செல்வதற்குள் தீவிபத்தில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டு, பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகின்றன.

ேஷக்கல்முடி, புதுக்காடு எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'வால்பாறையில் இருந்து, 40 கி.மீ., தொலைவில் வசிக்கிறோம். குடியிருப்புகளில் உள்ள மின் இணைப்புகள் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. இதனால், மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுகிறது. இப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால், வால்பாறை நகரில் இருந்து தான் தீயணைப்பு வாகனம் வர வேண்டும்.

தீயணைப்பு வாகனம் வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதால், தீ விபத்தின் போது அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தொழிலாளர்களின் நலன் கருதி, சோலையாறு அணைப்பகுதியில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us