ADDED : பிப் 17, 2025 10:53 PM
பொள்ளாச்சி; அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நாளை, 19ம் தேதி காலை, 11:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. அங்கலக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்படும். இத்தகவலை அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.
* நெகமம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நாளை (19ம் தேதி) காலை 11:00 மணிக்கு துவங்குகிறது. மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையில் நெகமம் கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. நெகமம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள மின் நுகர்வோர்கள் கூட்டத்தில் குறைகளை தெரிவிக்கலாம் என, நெகமம் செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.

