/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊடுபயிரிலும் 'மணம் வீசுகிறது' : கொத்தமல்லி இலையின் விலை
/
ஊடுபயிரிலும் 'மணம் வீசுகிறது' : கொத்தமல்லி இலையின் விலை
ஊடுபயிரிலும் 'மணம் வீசுகிறது' : கொத்தமல்லி இலையின் விலை
ஊடுபயிரிலும் 'மணம் வீசுகிறது' : கொத்தமல்லி இலையின் விலை
ADDED : நவ 07, 2025 09:32 PM

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், அதிகளவு ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ள, கொத்தமல்லி இலைக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் சுமார், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, சின்னவெங்காயம், தக்காளி, மஞ்சள், தென்னை, வாழை உள்ளிட்டவை முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது.
அதோடு, ஊடுபயிராக குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, கீரைகள், பூக்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், தற்போது, கொத்தமல்லி இலைக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, புள்ளாக்கவுண்டன்புதூர் விவசாயி சிவக்குமார் கூறுகையில், கொத்தமல்லி இலை, 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடுகிறது. 2 ஏக்கரில், இலை வாழை பயிரிட்டுள்ளோம். அதனிடையே, ஊடுபயிராக கொத்தமல்லி இலை பயிரிட்டோம். சாரல் மழை, அவ்வப்போது பெய்ததால், கொத்தமல்லி இலை கருகாமல் இருந்தது. செடியும் உயரம் கிடைத்துள்ளது. இதனால், ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது எங்களுக்கு நல்ல லாபம், என்றார்.

