/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சத்தில் தளம் அமைத்த முன்னாள் மாணவர்கள்
/
அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சத்தில் தளம் அமைத்த முன்னாள் மாணவர்கள்
அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சத்தில் தளம் அமைத்த முன்னாள் மாணவர்கள்
அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சத்தில் தளம் அமைத்த முன்னாள் மாணவர்கள்
ADDED : ஜன 13, 2025 12:16 AM

அன்னுார்,; அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முன்னாள் மாணவர்கள் தரைத்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1997 முதல் 2000 வரை பிளஸ் 1, பிளஸ் 2 வில் படித்த, அறிவியல் பிரிவு மாணவ, மாணவியர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் முன்னாள் மாணவர் சந்திப்பு பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
இப்பிரிவு மாணவர்கள் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பள்ளி நுழைவாயிலில் துவங்கி, மேடை வரை, 5,000 சதுர அடியில் பேவர் பிளாக் தளம் அமைத்து கொடுத்தனர். இதனை பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நாராயணசாமி பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிர்வாகி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் தலைமை ஆசிரியர் சக்திவேலுக்கு நினைவு பரிசு கொடுத்து, மாணவர்கள் அவரிடம் ஆசி பெற்றனர்.
தமிழாசிரியர் தாமோதர சாமி பேசுகையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 கோடி ரூபாய்க்கு மேல் இப் பள்ளியில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.
அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் அருண், நெதர்லாந்தில் பணிபுரிந்து வரும் சத்திய சேகர் ஆகியோர் தங்களது வெளிநாட்டு பணி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இப் பள்ளியில் இருந்து உயர்கல்விக்கு செல்லும் மாணவ மாணவியருக்கு உதவ முடிவு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தராஜ், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.