/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமர் படம் இல்லாமல் கண்காட்சியா ? அரசு அதிகாரிகளிடம் பா.ஜ., கேள்வி
/
பிரதமர் படம் இல்லாமல் கண்காட்சியா ? அரசு அதிகாரிகளிடம் பா.ஜ., கேள்வி
பிரதமர் படம் இல்லாமல் கண்காட்சியா ? அரசு அதிகாரிகளிடம் பா.ஜ., கேள்வி
பிரதமர் படம் இல்லாமல் கண்காட்சியா ? அரசு அதிகாரிகளிடம் பா.ஜ., கேள்வி
ADDED : ஜன 01, 2026 05:17 AM
சூலூர்: மத்திய அரசு துறை சார்பில் நடந்த கண்காட்சியில் பிரதமர் படம் இல்லாதது குறித்து, பா.ஜ.,வினர் சராமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விளக்கும் விழிப்புணர்வு கண்காட்சி, நேற்று முன் தினம் சூலூரில் துவங்கியது. இக்கண்காட்சியில், பிரதமர் மோடியின் படம் ஒன்று கூட இடம் பெறவில்லை, என்ற புகார் எழுந்தது.
அங்கு சென்ற கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சிதம்பரம், மயில்சாமி, சூலூர் ஒன்றிய நிர்வாகிகள் மகேந்திரன், விக்னேஷ் உள்ளிட்டோர் கண்காட்சி நடந்த மண்டபத்துக்கு சென்றனர். அங்கிருந்த மத்திய அரசு அதிகாரிகளிடம், 'மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடத்துகிறீர்கள். எந்த தகவலும் அளிக்கவில்லை. கண்காட்சியில் ஒரு இடத்தில் கூட பிரதமர் படம் இல்லையே என, சரமாரியாக கேட்டனர்.
பிரதமர் படம் இடம் பெற அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாகவும், இனி இதுபோன்று நடக்காது, எனவும், அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பா.ஜ., வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

