sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அன்னதான திட்டத்தை விரிவுபடுத்துங்க! பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை

/

அன்னதான திட்டத்தை விரிவுபடுத்துங்க! பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை

அன்னதான திட்டத்தை விரிவுபடுத்துங்க! பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை

அன்னதான திட்டத்தை விரிவுபடுத்துங்க! பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை


ADDED : ஜூலை 17, 2025 09:41 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், நாள் தோறும், 50 பக்தர்களுக்கு அன்னதான திட்டம் துவங்கப்பட்டது. இதனால், வால்பாறை முருகபக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அன்னதான திட்டம், பாதியாக குறைக்கப்பட்டு, 25 பேருக்கு மட்டுமே நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால், பக்தர்கள் அன்னதானம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

பக்தர்கள் கூறியதாவது:

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்னதான திட்டத்தில், 50 பக்தர்கள் பயன்பெற்று வந்தனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 25 பேருக்கு மட்டுமே 'டோக்கன்' வழங்கி, அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

எனவே, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் முன்பு இருந்தது போன்று, 50 பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கும் வகையில், திட்டத்தை விரிவுபடுத்த அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us