/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை ரயில்களில் கூடுதல் பெட்டி
/
கோவை ரயில்களில் கூடுதல் பெட்டி
ADDED : ஜூலை 18, 2025 12:25 AM
சேலம்; சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜூலை, 21 முதல், கூடுதலாக ஒரு ஏ.சி., சேர் கார் பெட்டி இணை க்கப்படுகிறது. மறுமார்க்க ரயிலிலும், ஒரு ஏ.சி., சேர் கார் பெட்டி இணைக்கப்படுகிறது.
இதே போல், கே.எஸ்.ஆர்., பெங்களூரு - கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜூலை, 21 முதல் கூடுதலாக ஒரு டபுள் டெக்கர் ஏ.சி., கோச் இணைக்கப்படுகிறது. மறு மார்க்க ரயிலிலும் ஒரு டபுள் டெக்கர் ஏ.சி., கோச் இணைக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து கரூர், நாமக்கல், சேலம் வழியாக கச்சகுடா செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில், நாளை முதல் கூடுதலாக படுக்கை வசதியுடன் கூடிய, ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.
மறு மார்க்கத்தில் வரும் கச்சகுடா - நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜூலை, 20 முதல், படுக்கை வசதியுடன் கூடிய ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

