ADDED : ஜன 30, 2025 07:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் டிரைவர்களுக்கு, இலவசமாக கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
36வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தையொட்டி, மாநகர போலீசார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில், நேற்று உப்பிலிபாளையத்தில் உள்ள போலீஸ் சமுதாய கூடத்தில், டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
முகாமை, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் துவக்கி வைத்தார். போக்குவரத்து துணை கமிஷனர் அசோக் குமார், போக்குவரத்து கிழக்கு உதவி கமிஷனர் சேகர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

