/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி சான்றிதழ் மோசடி: எல்.ஐ.சி., நிர்வாகம் ஆய்வு
/
போலி சான்றிதழ் மோசடி: எல்.ஐ.சி., நிர்வாகம் ஆய்வு
போலி சான்றிதழ் மோசடி: எல்.ஐ.சி., நிர்வாகம் ஆய்வு
போலி சான்றிதழ் மோசடி: எல்.ஐ.சி., நிர்வாகம் ஆய்வு
ADDED : ஜன 23, 2026 03:34 AM
கோவை: போலி சான்றிதழ் வழங்கி, பணியில் சேர்ந்த எல்.ஐ.சி., கோட்ட மேலாளர், பணி நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை - திருச்சி ரோட்டில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகத்தில், கோட்ட மேலாளராக பணியாற்றி வந்தவர், முத்துசெல்வன், 59. இவர், பணியில் சேரும்போது, தனது கல்வி மற்றும் இதர சான்றிதழ்களை சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில், அவர் வழங்கிய சான்றிதழ்கள் போலி என, புகார் எழுந்தது.
இதுகுறித்து எல்.ஐ.சி., அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அவர் போலி சாதி சான்று சமர்ப்பித்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, முத்துசெல்வன், பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதுபோல் வேறு யாராவது சான்று மோசடி செய்துள்ளனரா என, எல்.ஐ.சி., அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

