/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஞ்சரிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர் கைது
/
ரேஞ்சரிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர் கைது
ADDED : அக் 28, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஞ்சூர்; வனத்துறை ரேஞ்சரை பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர் கைது செய்யப்பட்டார்.
மஞ்சூர் பகுதியில் நிருபர் என்ற போர்வையில் பாபு, சுரேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர், வனத்துறை ரேஞ்சர் சீனிவாசனிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக மஞ்சூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரித்து, பணம் கேட்டு மிரட்டியதாக போலி நிருபர் செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான பாபு, சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.